districts

img

புதுவையிலும் பாஜக சர்வாதிகாரம்: கோரிக்கை பதாகைளுக்கு தடை!

புதுச்சேரி, ஜூலை 26- புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை பதாகைகள் எடுத்து வர  பேரவைத் தலைவர் செல்வம் தடை வித்திருக்கிறார். புதுவை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக முழு மையான பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதில்லை. மார்ச் மாதம் இடைக் கால பட்ஜெட்டும், ஆகஸ்ட், செப்டம்ப ரில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது.  நடப்பு நிதியாண்டிலும் மார்ச்  மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வில்லை. மார்ச் மாதம் 5 மாத செலவினங் களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முழுமை யான பட்ஜெட்டை தாக்கல் செய்வ தற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் அடுத்தமாதம் (ஆகஸ்டு) 10 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநர் தமிழிசை உரை யாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். இத்தகவலை பேரவை  செயலாளர் முனுசாமி தெரிவித் துள்ளார்.  மறுநாள், நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிகிறது. இந்த கூட்டத்தொடர் குறைந்த பட்சம்  15 நாட்கள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் செய்தியாளர் களை சந்தித்த பேரவைத் தலைவர்  ஏம்பலம் செல்வம், “புதுவை 15-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் வரும் ஆகஸ்டு 10 ஆம் தேதி காலை 9.30  மணிக்கு தொடங்குகிறது. அதன்பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி பேரவை அலுவல் நாட்களை முடிவு செய்யும்” என்றார். இந்த முறை முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்றும் இதனை காகித மில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்ய  தகவல் தொழில்நுட்ப துறையுடன் பேசி  வருகிறோம் என்றும் அவர் கூறினார். சட்டமன்றத்தில் பதாகைகள், பேனர் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. புதிய சட்டமன்ற கட்டிடத்தை கட்ட தில்லியை சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளோம். விரைவில் பூமி பூசை நடத்தப்படும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.