districts

img

ஓசூர் உருது பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள்

ஓசூர் மாநகராட்சி சீதாராம் நகர் அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஓய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் என்.எஸ். மாதேஸ்வரன்,சீனிவாசலு,மோசின் தாஜ் நிசார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அயூப்கான்,நவ்ஷத் தலைமை ஆசிரியர் கலந்து கொண்டனர்.