கள்ளக்குறிச்சி, 10- கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவன மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி ஷாலினிகுமாரி 590 மதிப்பெண்களும், நித்திஷ் குமார் 587 மதிப்பெண்களும், முகுந்தன் 575 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர். பாஸ்கர், லாவண்யா ஆகியோர் 574 மதிப்பெண்களும், ஜனனி 569 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். 500க்கு மேல் 90 மாணவர்களும், பல்வேறு பாடப்பிரிவுகளில் 25 மாண வர்கள் 100க்கு 100 எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை தாளாளர் கந்தசாமி, செயலாளர் லட்சுமி கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பரத்குமார், முதல்வர்கள் ராமசாமி, புவனேஸ்வரி, சுமதி, வேலு ஆகியோர் பாராட்டினர். கல்வி நிறுவன செயலாளர் லட்சுமி கந்தசாமி கூறுகையில், ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் பாரதி கல்வி நிறு வனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மென்மேலும் வெற்றி பெற்று வருகிறது. கல்வியின் தரத்தை உயர்த்தி மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படும். அதேபோல் பாரதி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பாரதி கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.