சென்னை, ஏப். 3 - சென்னை - புதுச்சேரி இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ப்படும் என்று சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமு கங்களின் கடந்த நிதியாண்டின் செயல்பா டுகள் குறித்து இரு துறைமுகங்களையும் நிர்வ கித்து வரும் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் வசமிருந்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் 50 சதவீத பங்கு களையும் சென்னை துறைமுகம் முழுமை யாக அண்மையில் வாங்கியது. இதனை யடுத்து எண்ணூர் காமராஜர் துறை முகத்தின் முழு உரிமையாளராக சென்னை துறைமுகம் உருவெடுத்துள்ளது. 2021-22 நிதி யாண்டில் சென்னை மற்றும் எண்ணூர் துறை முகங்கள் சுமார் 87 மில்லியன் டன் சரக்கு களைக் கையாண்டு வரிக்கு முந்தைய லாபமாக 648 கோடி ரூபாய் ஈட்டியுள்ளன. சென்னை துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட மேம்பால திட்டம் இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றியமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை முழுமையாகத் தயா ராகியுள்ளது. காமராஜர் துறைமுக நிர்வா கத்தை கவனிக்க மேலாண்மை இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். சென்னை-புதுச்சேரி இடையே விரை வில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை-கன்னியாகுமரி இடையே பயணிகள் கப்பல் போக்கு வரத்தை தொடங்குவது குறித்த திட்டம் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.