ஓசூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 15 வது நிதி குழு மானியத்தில் ரூ.188 லட்சம் மதிப்பில் பேட்டரியில் இயங்கும் 61 வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது 19 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா,மாநகர ஆணையர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். துணை மேயர் ஆனந்தய்யா, சுகாதார அலுவலர் பிரபாகர், மாநகர சுகாதார குழுத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் உடனிருந்தனர்.