districts

img

பழங்குடியின மக்களுக்கு அடிப்படை சேவைகள்

திருவண்ணாமலை,பிப்.14- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் அத்தாட்சிகள் இல்லாத பழங்குடி மக்களுக்கு அரசின் சேவைகள் தொடங்கி யுள்ளது. வந்தவாசி வட்டத்தில், சளுக்கை,பாதிரி, மங்கநல்லூர்,பாஞ்சரை, நமண்டி, சத்திய வாடி,மாவலவாடி, தெள்ளூர் உள்ளிட்ட கிராமங்களில்  பழங்குடியின மக்களுக்கு பல ஆண்டுகளாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை,ரேஷன் அட்டை, குடிமனை  உள்ளிட்ட எவ்வித அடிப்படை சேவைகளும் வழங்கப்படாமல் உள்ள தாகவும், அதனால் அவர்களின் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.  பழங்குடியின மக்களுக்கு  அடிப்படை வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டி, கடந்த நவ.29 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக  வந்தவாசி வட்டாட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அதைதொடர்ந்து, குடி யிருக்க வீடு இல்லாததால், வந்தவாசி வட்டம், சளுக்கை கிராமத்தில், அண்ணா நகர் பகுதியில் கைக்குழந்தையுடன், பொது சுகாதார கழிப்பறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழங்குடியின குடும்பம் ஒன்று தஞ்சமடைந்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரி களுக்கு தகவல் அளித்தனர். மேலும்,  இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், பிப் 12 ஆம் தேதியன்று சளுக்கை கிராமத்திற்கு செய்யாறு கோட்டாட்சியர் அனாமிகா, வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி தலைமையில் அலுவலர்கள் சென்று, பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றிற்கான விவரங்களை பதிவு செய்தனர். மேலும், செவ்வாய் முதல் 3 நாட்களுக்கு வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை சேவைகள் வழங்கும் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   பொது கழிவறையில் தஞ்சமடைந்த குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கப் பட்டது. மேலும், வந்தவாசி வட்டத்தில் உள்ள பொது கழிவறைகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவும், வட்டாட்சியர் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.