districts

நெம்மேலியில் தூண்டில் வளைவு: மீனவர்கள் வரவேற்பு

மாமல்லபுரம்,ஏப்.7-  மாமல்லபுரம் அருகே உள்ளது நெம்மேலி மீனவ கிராமம். இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீனவர்கள் கடற் கரையில் மீன்பிடி படகு களை நிறுத்த முடியாத நிலை  ஏற்பட்டு உள்ளது. மேலும்  கடல் அரிப்பு காரணமாக கரையில் அமைக்கப்பட்டு இருந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து காணப்படு கிறது. இதனால் மீனவர்க ளின் போக்குவரத்து பாதிக் கப் பட்டு மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதையடுத்து நெம்மேலி யில் கடல் அரிப்பை தடுக் கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண் டும் என்று அப்பகுதி மீனவர் கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த னர்.   இதுதொடர்பாக மாவட்ட  ஆட்சியர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் ஆய்வு  செய்து வந்தனர்.இதற்கிடையே சட்டப் பேரவையில்  நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில்  வளைவு, மீன் இறங்கு தளம்,  வலை பின்னும் கூடம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதன்காரணமாக நெம் மேலி மீனவ கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது என மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.