மாமல்லபுரம்,ஏப்.23- மாமல்லபுரம் அருகே பள்ளி நூலக உட்புற சுவரில் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளை அழகுபடுத்த இயற்கை சம்பந்த மான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் படிக்கின்ற னர். இப்பள்ளியில் உள்ள நூலக கட்டிட உட்புற சுவரில், மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரி மாணவர்கள், இயற்கை சம்பந்தமான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வண்ணம் தீட்டினர்.