districts

img

சிறந்த கணித ஒலிம்பியாட் மாணவர்களுக்கு விருதுகள்

சென்னை, டிச.22- கணித மேதை ராமானுஜம் பிறந்தநாள் (டிச. 22)  ஒவ்வொறு ஆண்டும்  கணித பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை பெருமை படுத்தும் வகையில் ஆகாஷ் கல்வி நிறுவனம் கொண்டாடி வருகிறது. வளர்ந்துவரும் கணித ஜாம்பவான்களின் திறனையும் கடுமையான உழைப்பையும் அங்கீகரித்து, அவர்க ளுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் பரிசுகளைக் கொடுத்தது. சிறந்த ஆசிரியர்களும் சாதகர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, கல்வி நிபுணத்துவத்தை கொண்டாடும் மற்றும் மாணவர்களில் முக்கியமான சிந்தனை மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன்களை வளர்க்கும்  ஊக்கப்படுத்தும் தளமாக இருந்தது. இந்த விழாவில் ஆகாஷ் கல்வி நிறுவன தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தலைவர் சிவபிரசாத் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி னார். “கணிதம் என்பது எண்களாக மட்டுமல்ல; கண்டு பிடிப்பு, தர்க்கம் மற்றும் முன்னேற்றத்தின் மொழி என்று அவர் கூறினார். இளம் மாணவர்களிடம் திறன்களை வளர்க்கவும், கற்றலின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கவும் கணித ஒலிம்பியாட் போட்டி உதவும் என்றும் அவர் கூறினார்.