சுய முன்னேற்ற எழுத்தாளர் இராம்குமார் சிங்காரம் எழுதிய “நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர் ஆகவில்லை?” என்ற தன்முனைப்பு நூலுக்கு, தமிழக அரசின் 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் (21 பிப்.) சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் நடந்த உலகத் தாய்மொழி தின விழாவில், இந்த விருதினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலர் இரா. செல்வராசு வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் ந. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனர் இரா. சந்திரசேகரன், பிரபல பேச்சாளரும் - எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியருமான பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.