கடலூர், ஜூன், 17-
பண்ருட்டியில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்கு வரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
பண்ருட்டி முக்கிய சாலை சந்திப்பு, ராஜாஜி சாலை, பஸ்வெளியே வரும் வழி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் விதிகளை மீறி நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் அதிக அளவு புகார்கள் கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடலூர் எஸ்.பி, பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவு படி பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவிலில் பண்ருட்டி போக்கு வரத்து ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் அழைத்துப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் அனைத்து ஆட்டோக்களிலும் போக்கு வரத்து காவல்துறை சார்பில் வழங்கப் பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். அப்படி ஒட்டப்படாத ஆட்டோக்கள் இயக்கக் கூடாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. பொது மக்க ளுக்கும் போக்குவரத்திற்கும் இடை யூறாக சாலைகளில் ஆட்டோவை நிறுத்தி அதிக அளவு பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது. சீருடை அணிந்து இருக்க வேண்டும். இதை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தனர்.