விழுப்புரம்,ஆக.4-
விழுப்புரம் அருகே நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே பூத்தமேடு கூட்டு சாலையின் வளைவு பகுதியில் நெடுஞ் சாலையை ஆக்கிரமித்து ஓட்டல்கள், தேநீர், மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் என 10- க்கும் மேற்பட்ட நடத்தி வந்தனர்.
இக்கடைகளில் அங் குள்ள சாலையின் வளை வில் வாகனங்கள் திரும்பும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தன. அதில் உயிர் பலி, படுகாயம் நடந்தது. இதை தடுக்கும் வகையில் பூத்தமேடு கூட்டு சாலை பகுதியில் ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனால் நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் ஆக்கிர மிப்பு கடைகளை தாங்களா கவே முன்வந்து அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு நெடுஞ் சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை.
இந்நிலையில் வியாழக் கிழமை (ஆக.4) காவல் துறையினர் பாதுகாப்புடன் கடைகளை பொக்லைன் எந்திரத்தின் மூலம் அதிகாரி கள் அகற்றும் பணியில் ஈடு பட்டனர். இதற்கு அங்குள்ள கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மளிகை கடை உரிமையாளர்களான கன கராஜ் ( 55), அவரது தம்பி விஸ்வலிங்கம் (45), கனக ராஜின் மகன் தினேஷ் (20) ஆகிய 3 பேர் தீக்குளிக்க முயன்றனர். காவல்துறையி னர் தடுத்து நிறுத்தினர். அதற்குள்ள அனைத்து கடைகளையும் அகற்றினர்.