விழுப்புரம், மே 5- நீதிமன்ற உத்தரவைக் காட்டி குடியிருப்புகளை இடிக்க முயற்சித்த அதி காரிகளை மார்க்சிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்ட செவலபுரை கிராமத்தில் குளத்துமேடு அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக 93 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி இந்த குடியிருப்புகளை அகற்ற மேல்மலையனூர் வட்டாட்சியர் கோவர்தன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்பு செல்வன் தலைமையில் அதிகாரிகள் முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் பாதிக்கப் பட்ட மக்கள் ஜெசிபி வாக னங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் ஆட்சியர் அமித், செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பல ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வசித்து வரும் மக்களின் குடியிருப்புகளை அகற்றாமல் பட்டா வழங்க வேண்டும், இல்லையென்றால் மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்தனர். இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிபிஎம் நிர்வாகி களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் வீடுகளை இடிக்கத் துவங்கினர். இதற்கிடையே வீடுகளை இடிக்க வேண்டாம் என்ற உத்தரவு கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் வீடுகளை இடிப்பதை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனை வரும் விடுதலை செய்யப் பட்டனர். பிறகு மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஆர்.டி.முருகன், மேல்மலை யனூர் வட்டச் செயலாளர் டி.முருகன், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் அரிஹரகுமார், கிளைச் செயலாளர் ராஜா ஆகியோர் மக்களை சந்தித்து ஆறு தல் கூறினர். இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.