ஆட்டோ ஓட்டுநரை கொல்ல முயற்சி
அம்பத்தூர், மார்ச் 19- அம்பத்தூர் அருகே உள்ள கீழ் அயனம்பாக்கம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராவணன்(28). இவர் ஆட்டோ ஓட்டு நர். இவரது மனைவி நந்தினி. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு ராவணன் உணவு வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராவணனை மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டிய தில் வலது கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
வேலூரில் ஒரே நாளில் ரூ10.34லட்சம் பறிமுதல்
வேலூர். மார்ச் 19 - 2024 மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே காரில் வந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுலோச்சனா தேவி (47) என்பவர் ரூ.3,84,400 பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்தது தெரிந்தது. பின்னர் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். காட்பாடியில் 4,49,400 ரூபாயும் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டு அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது . இதனையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வேலூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது.
அரிப்பு, பூகம்பத்தை சமாளித்து நிற்கும் டிஎம்டி கம்பி அறிமுகம்
சென்னை, மார்ச் 19- சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியா வின் முன்னணி டிஎம்டி கம்பிகள் உற்பத்தியாளர்களான ஏஆர்எஸ் குழுமம் புதிய தயாரிப்பான ஏஆர்எஸ் சிஆர்எஸ் 550டி-ஐ கம்பியை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தயாரிப்பு அனைத்து வகையான கட்டு மானங்களும், அரிப்பு மற்றும் பூகம்பத்தை எதிர் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் ஏஆர்எஸ் குழுமம், டிஎம்டி கம்பிகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக தொழில்நுட்ப வாகனங்களுடன் நுகர்வோர் இருப்பிடத்திற்கே சென்று டிஎம்டி கம்பிகளை பரிசோதித்து அதன் தரம் குறித்து அறிக்கை அளித்தது. சுமார் 28ஆயி ரத்தி770 சோதனைகளை முற்றிலும் இலவசமாக மேற்கொண்டதாக ஏஆர்எஸ் குழுமத்தின் நிர்வாக இயக்கு னர் அஷ்வனி குமார் பாட்டியா கூறினார். 1லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தங்களின் கட்டு மானங்களுக்கு பொருத்தமான டிஎம்டி கம்பிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநர் மூர்த்தி கூறினார்.
பத்திரிகையாளர்களுக்கும் தபால் வாக்கு
சென்னை, மார்ச் 19- தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் பத்திரிகையாளர்கள் மற்றும் இதர பிரிவில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருக்கும் வணிக கப்பல் மாலுமிகள், தொலைத் தொடர்புத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிவில் விமான போக்குவரத்து, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மாநில அரசு ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்ய அனைத்து ஏற்பாடு செய்யுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.