சென்னை,நவ.23- சென்னை ராயபுரம் பகுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத தங்கசாலை (மின்ட்) பேருந்து நிலையத்தில் முறையாக பராமரிக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டனர். வட சென்னையின் பிரதான மக்கள் போக்குவரத்து பகுதியாகக்கருதப்படும் தங்கசாலை பேருந்து நிலையம் கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி உள்ளது. மாணவர்கள், மருத்துவமனை செல்வோர், தொழிலாளர்கள் என ஆயிரக் கணக்கானோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகள் அமர்வதற்கு ஒரு இருக்கை கூட போடப்படவில்லை, தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் இல்லை, குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லை என்பது வேதனையான தகவலாகும். மேலும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்த கே.கே.நகர் செல்லும் தடம் எண் 37டி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னையில் ஆட்சியாளர்களுக்கு இழுக்கை ஏற்படுத்தும் அடிப்படை வசதி யற்ற இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட பொருளாளர் விஜயகுமார் தலைமையில் புதனன்று கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது. இதில் மாநிலத்தலைவர் கார்திக், வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.பி.சரவணன்,துணைத்தலைவர் முருகேசன், செயற்குழுஉறுப்பினர் நீதி தேவன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களி டம் கையெழுத்து பெற்றனர். இந்த அறவழி போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல் துறையினர் அனைவரையும் குண்டு கட்டாக கைது செய்தனர். கைது நடவடிக் கைக்கு எதிராக வாலிபர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாலையில் அனை வரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.