சென்னை,ஜூலை 31-
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.
விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பேருந்து நிலையத்தில் நடந்து வரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திங்களன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா சென்னைப் பெரு நகர வளர்ச்சிக் குழு மத்தின் உறுப்பினர் செய லர் அன்சூல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.