districts

img

பளு தூக்கும் போட்டியில் அசத்திய கல்லூரி மாணவர்கள்

சென்னை, அக்.22- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  மாவட்ட, மண்டல அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என மொத்தம் 11,56,566 நபர்கள் 36 வகையான விளை யாட்டு போட்டிகளில், 168 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.  இதில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நடை பெற்றது. கல்லூரி மாணவர்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பி.செண்பகராஜ் 206 கிலோ எடையை தூக்கி (ஸ்நாட்ச் 114+கிளீன் அன்ட் ஜெர்க் 152) தங்கப் பதக்கம் வென்றார். கோயம்புத்தூரைச் சேர்ந்த பி.ஆகாஷ் 260 கிலோ எடையை தூக்கி (120+140) வெள்ளிப் பதக்கமும், சென்னையைச் சேர்ந்த சி.தினேஷ்  260 கிலோ எடையை தூக்கி (116+144) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.  கல்லூரி மாணவர்களுக்  கான 73 கிலோ எடைப் பிரிவில் ராணிப்பேட்டை யைச் சேர்ந்த ஏ.மனோ பாலா 290 கிலோ எடையை தூக்கி (135+155) தங்கப் பதக்கம் வென்றார். திண்டுக்கல்லைச் சேர்ந்த எம்.யுவராஜ்  274 கிலோ எடையை தூக்கி (119+155) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். பதக்கப்பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது.