தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவும், ஜாக்டோ-ஜியோ மாநில மாநாட்டில் அளித்த வாக்குறுதியின் படியும் பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக உடற்பயிற்சி ஆசிரியர்கள், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஜாக்டோ ஜியோ சார்பில் கடலூர், வேலூர், கிருஷ்ணகிரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, வட்டார தலைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.