கடலூர், மார்ச் 10- கடலூர் மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் இசை பள்ளியில் நடை பெற்ற கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) நடைபெற்றது. கலைத் துறையில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சிறந்து விளங்குகின்ற குரல் இசை, கருவி இசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, செய்தி துறை சார்பில் கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலை பண்பாட்டு துறை சார்பில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்க டேஷ் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டி னார். இதில் குரல் இசை ஆசிரியர் யோக லட்சுமி, நாதஸ்வர ஆசிரி யர் ரவிச்சந்திரன், தவில் ஆசிரியர் ராம மூர்த்தி, நாதஸ்வர ஆசிரி யர் ரவிச்சந்திரன், வேணு கோபால், பரதநாட்டிய ஆசி ரியர் ரேகா, வயலின் ஆசிரியர் சரவணன், மற்றும் சவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.