districts

உயரிய திறனை நிறுவ தொழில் பழகுநர் திட்டம்

சென்னை,ஏப்.28- தனிநபர்கள், தொழில்துறையினர், குடும்ப தலைவிகள் ஆகியோரிடம் காணப்படும் தனிப்பட்ட திறமையை மெருகூட்டி சமூகத்தில் விரைவாக திறமை யானவர்களாக மாற்ற ஆண்டனோ, ஹரிணி ஆகியோர்  மன வளக்கலை பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்கள் நடத்தும்  4 ஆண்டு தொழில் பழகுனர் திட்டத்தின் ஒரு பகுதியான  தனிநபர் வளர்ச்சியை மையமாக வைத்து அறிவியல் ரீதியில் சான்றிதழ் பயிற்சியை உருவாக்கியுள்ளனர். இதற்காக சென்னையில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை அவர்கள் நடத்தினர். இதில் கிரியேட்டர் ஹரிணி ராமச்சந்திரன் பேசுகையில் ‘இன்றைய உலகில் வெற்றி பெற்ற மனிதர்களாக இருப்பதுடன், உலகத்  தலைவர்களாக உருப்பெறத் தேவையான மிக உயரிய திறன்கள் கொண்ட மனிதர்களாகவும் இருக்க  வேண்டும்.   உலகப் பாதையை மாற்றி அமைக்கும் வகையில் இன்னும் பல தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.