குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமையன்று (மார்ச் 3) சென்னை, கிண்டி, சிட்கோ கூட்டமைப்பு அலுவலகக் கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னை மாவட்ட, தொழில் வளர்ச்சி, எதிர்கால தொழில் முன்னேற்றம் குறித்து தகவல் விளக்க நூலினையும் வெளியிட்டார்.