சென்னை,அக்.27- 2021-22-ம் ஆண்டுக்கான ஓவியப் போட்டி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தின் வழியாக நடத்தப்பட உள்ளது. திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள படைப்பாளிகளிடம் இருந்து பெற்று நடுவர் குழு மூலம் தெரிவு செய்யப் பட்டு சிறந்த 15 படைப்புக ளுக்கு பரிசுகள் வழங்கப் பட உள்ளது. படைப் பொன்றுக்கு ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க உள்ள ஓவி யங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.11.2022 மாலை 5.30 மணி. மேலும் விவரங்க ளுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113, தொலைபேசி 044-22542992-ல் தொடர்பு கொள்ளலாம்.