கடலூர்,ஏப்.18- கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் மேயரின் நேர்முக உதவியாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாநகராட்சி பகுதிகளில் வீடு மற்றும் கடைகள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்குவதற்கு தனியார் நிறுவ னத்துடன் இணைந்து லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை செய்தனர். பின்னர் தனியார் கட்டிட அனுமதி வழங்கும் நிறுவனத்தில் சோதனை செய்தனர். கடலூர் மாநகராட்சியில் பரணி என்பவரி டம் திட்ட அனுமதிக்காக லஞ்சம் வாங்கிய தாக மாநகராட்சி மேயரின் நேர்முக உதவி யாளர் ரகோத்தமன், கட்டிட வரைபட உரிமம் பெற்றுத்தரும் நிறுவனமான பங்கஜம் பிளானர்ஸ் உரிமையாளர் ஆறுமுகம் ஆகி யோர் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் நேரில் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் மினி மாநகராட்சி அலுவலகம் வெளியில் செயல்பட்டதும், அதையொட்டி இரண்டு கட்டுமான நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.