சென்னை, ஏப்.25- சென்னையில் மேலும் ஒரு குத்துச்சண்டை அகாடமி உரு வாக்கப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.25) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்து பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் போட்டி மனப்பான்மையை ஊக்கப்படுத்துவதற்காக அங்கீ கரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களுக்கு 50,000 முதல் 10 லட்சம் வரை ஒலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் அல்லாத போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது” என்றார். மாநில அரசு அரசுத்துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் உள்ள 46 விளையாட்டுகள் மற்றும் 5 ஒலிம்பிக் அல்லாத விளையாட்டு களான ரோலர், ஸ்கேட்டிங்,விளையாட்டுப் போட்டி களில் குறிப்பாக ரோலர் ஸ்கேட்டிங், குவாஷ், சிலம்பம், கபடி, சிலம்பம், ஸ்குவாஷ், வுஷூ விளையாட்டுகளும் இதில் சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார். உறுப்பினர்களின் விவாதங்க ளுக்குப் பிறகு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: சென்னை பாரம்பரியமாக குத்துச்சண்டை விளையாட்டுக்கு புகழ்பெற்றது. நகரில் பல்வேறு குத்துச்சண்டை வீரர்கள் உருவாகி குத்துச்சண்டை விளையாட்டில் புகழ்பெற்று விளங்குகின்றனர். எனவே குத்துச்சண்டை வீரர்களை உருவாக்குவது அவசியம் சென்னை யில் குத்துச் சண்டைக்கு புத்துயிர் அளிக்க மேலும் ஒரு அகடாமி அமைக்கப்படும். தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதி யில் மலைவாழ் இன மக்களிடையே உடற்தகுதி விழிப்புணர்வை உலக திறனாளர்கள் கண்டறியும் போட்டிகள் நடத்தப்படும் அதில் சாதனை படைக்கும் மாணவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.