districts

காலிப் பணியிடங்களை நிரப்பிடுக

வேலூர், ஏப். 18 - அங்கன்வாடி மையங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்  சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர்களின் நலன்களை  கருதி கோடை காலமான மே மாதத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு விடுவதைப் போல் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும். 10 குழந்தை களுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்களாக்கு வதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையங்களோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் கொடுப்பதை கைவிட்டு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த  அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனை யின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். சமையல் கேஸ் சிலிண்டருக்கு பில்படி  முழுமையான பணம் வழங்க வேண்டும். அரசு ஆணையின்படி வீட்டுவாடகை படி ரூ.600 அனைத்து பகுதி ஊழியர்களுக் கும் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் சீருடை சேலைக்கு பதிலாக கோட்  வழங்குவதை கைவிட்டு பழைய நடை முறையை அமல்படுத்த வேண்டும். அரசாணையின்படி அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் இன்சென்டிவ் உடனடியாக வழங்க வேண்டும். பணி நேரம் காலை 9.30  மணியில் இருந்து மாலை 3 மணி என மாற்றி  அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சி.தேவி, மாவட்டச் செயலாளர் கே.ஜூலி, நிர்வாகிகள் உமா, மல்லிகா, கோகிலா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத் தலைவர் டி.முரளி நிறைவு செய்து பேசினர்.