districts

img

முறைசாரா தொழிலாளர்களையும் இஎஸ்ஐ திட்டத்தில் இணைத்திடுக

சென்னை, ஜூன் 12 - இஎஸ்ஐ திட்டத்தில் முறைசாரா தொழிலா ளர்களையும் இணைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட 12வது ஆண்டு பேரவை ஞாயி றன்று (ஜூன் 12) கிண்டியில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், நல வாரியம் வாயிலாக வழங்கப்படும் ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும், அங்கீ கரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் வாயிலாக மட்டுமே நலவாரிய பதிவை மேற்கொள்ள வேண்டும். நலவாரிய உறுப்பினர் பதிவை ஆன்லைன் முறையோடு, நேரடியாகவும் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைக்கு மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் கே.துளசிராமன் கொடி யேற்றினார். துணைத் தலைவர் ஆர்.குமார்  வரவேற்றார். துணைத் தலைவர் கே.மோகன்ஜி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் துவக்கவுரையாற்றினர். மாவட்ட பொதுச் செயலாளர் யு. அணில்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஆர்.துளசி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ.நடராஜன் (கட்டுமானம்), ஜி.ஜெயராமன் (தையல்) மாநாட்டை வாழ்த்தி பேசினர். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் நிறைவுரையற்றினார். நிர்வாகி கே.குணசேகரன் நன்றி கூறினார். மாவட்டத் தலைவராக டி.ஏ. லதா, பொதுச்  செயலாளராக யு. அணில்குமார், பொருளா ளராக கே. மோகன்ஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.