சென்னை,செப்.13- தமிழகத்தில் தொடர் விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (15-ந் தேதி) மற்றும் மீலாது நபி (16-ந் தேதி) ஆகிய தினங் களை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம் பாக்கத்தில் இருந்து திருவண்ணா மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோ வில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு கூடு தலாக 955 பேருந்துகள் இயக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப கூடுதல் பேருந்து கள் இயக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது.