சிதம்பரம் அரசுகலைக்கல்லூரியில் வேதியியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கல்லூரி நூலக அரங்கில் நடைப்பெற்றது. வேதியியல் துறைத்தலைவர்.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் சாந்தி சிறப்புரையாற்றினார். கல்லூரியில் 1993முதல் 2003ஆம் ஆண்டு வரை வேதியியல் துறையில் பயின்ற 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நெகிழ்ச்சியோடு நடைபெற்ற இந்நிகழ்வில் வேதியியல் துறை முன்னாள் மாணவர் சக்தி நாதன் நன்றி கூறினார்.