districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதல் பணி ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி, அக். 3 - கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், சூளாங்குறிச்சி ஊராட்சி யில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிகப் படுத்தவும்,சுய உதவிக்குழுவில் காலியிடம் இருந்தால் அவற்றை நிரப்பிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவில் இணைய விரும்பினால் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் தலைவியை அணுகி மகளிர் சுய உதவிக் குழுவில் சேரலாம். கலைஞரின் கனவு இல்லத் திட்டம் அல்லது பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மகளிர் யாரேனும் வீடு கட்டி கொடுத்திருந்தால் மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுழல் நிதி கடனுதவி அறிவுறுத்தப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்தி லும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த பணி ஒதுக்கீடுகளுடன் கூடுதல் பணி ஒதுக்கீடு  வழங்கப்பட்டு வருகிறது.  ஒரு கிராமத்தில் யார் வந்து வேலை கோரினாலும் வழங்க வேண்டும் என்பதற் காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சரியான நேரத்திற்கு தேவையான விவசாய உபகரணங்களுடன் பணிக்கு வந்து இத்திட்டம் வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று மேல் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். முன்னதாக எச்ஐவி மற்றும்  எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு உறுதி  மொழியியையும், பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழியினையும் அரசு அலுவலர் கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ் குமார்,திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)  சுந்தர்ராஜன், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழு தலைவர் வரவுக்கரசி சாமி சுப்பிர மணியன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைமுருகன், ஜெகநாதன், ஊராட்சி மன்றத்  தலைவர் கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.