districts

img

முன்னுரிமை அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பகள்

சென்னை, ஜன. 11- அடுக்குமாடி குடியிருப்புகளை முன்னுரிமை அடிப்படையில் தோட்டம், ராமதாஸ் நகர் மக்க ளுக்கு வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்பு குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ராயபுரம் 53ஆவது வட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் 900க்கும் மேற்பட்ட புதிய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 2 வருடங்களுக்கும் மேலாகிறது. யாருக்கும் இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த குடியிருப்பு களை அருகில் வசிக்கும் தோட்டம், ராமதாஸ் நகர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக ஒதுக்க வேண்டும் என அனைத்துக் கட்சி ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் அண்மையில் வெளி நபர்கள் 133 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மூலக்கொத்தளத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடி யிருப்புகளை தோட்டம், ராமதாஸ் நகர் மக்களுக்கு முன்னுரிமை என்ற  அடிப்படையில் இலவசமாக வழங்க வேண்டும், அதேபோல் ஜிஎச்ஐ பிளாக் அடுக்குமாடிகளையும் ராமதாஸ் நகர் பிரிவில் தோட்டம் மக்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வியாழனன்று (ஜன. 11) மிண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ச.முருகேசன் (சிபிஎம்) தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், எஸ்.பவானி, டி.வெங்கட், நீதிதேவன், சக்தி, ராஜேஷ் (அதிமுக), முனியம்மாள் (விசிக) ஆகியோர் பேசினர். இதுகுறித்து எஸ்.கே.மகேந்திரன் கூறுகையில், இந்த புதிய குடியிருப்புகளின் அருகில் வசிக்கும் மக்கள் சாதாரண ஏழை கூலித் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் குடிசை வீடு களில் வசிக்கின்றனர். எப்போது மழை பெய்தாலும் இந்த குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படு கின்றனர். மேலும் வீடுகளை ஒதுக்கக் கோரி கடந்த இரண்டு வருடங்களாக கட்சி வித்தியாச மின்றி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யாமல் திடீரென வெளி நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பினர். எனவே தமிழ்நாடு அரசு ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படை யில் அவர்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.