districts

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை நேரம் காலை 7 மணிக்கு துவங்குவதால் பெண்கள் வீட்டு வேலை, சமையல், குழந்தைகள் பராமரிப்பு போன்றவை பாதிக்கப்படுகிறது. எனவே வேலை நேரத்தை மாற்றி காலை 9 மணிக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன், சிபிஎம் மாவட்ட நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், வட்டாரத் தலைவர் பாலசுந்தரம், வட்டாரச் செயலாளர் ரமேஷ் பாபு, நிர்வாகி சாம்பசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.