செங்கல்பட்டு, ஏப்.8- செங்கல்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் அனைத்து உடனுக்குடன் செய்து தரப்படும் திமுக வேட்பாளர் க.செல்வம் உறுதி அளித்தார். காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக செங்கல் பட்டு அடுத்த ஆப்பூரில் காட்டாங்கொளத் தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தானம் தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். ஆப்பூர், பழவேலி, ஒழலூர், ஆலப்பாக் கம், மேலமையூர், வல்லம், வீராபுரம், குன்னவாக்கம், தென்மேல்பாக்கம் என 20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். இதில், காட்டாங்குளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணா கரன், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, விசிக மாவட்ட செயலாளர் கள் தென்னவன், கனல்விழி, சிபிஎம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் சேஷாத்திரி, செங்கல்பட்டு பகுதி செயலாளர் வேலன், மாவட்ட குழு உறுப்பினர் குணசே கரன் திமுக காட்டாங்குளத்தூர் ஒன்றிய அவைத்தலைவர் திருமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள் பழவேலி மாலா காமராஜ், மேலமையூர் ஹெலன் சிந்தியா சரவணன், குன்னவாக்கம் சத்யா, வீராபுரம் டில்லி, சிங்கப்பெருமாள் கோவில் துணை தலைவர் ராஜன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.