districts

img

அகில இந்திய அளவில் 33-வது இடத்தில் அழகப்பா பல்கலை.

சிவகங்கை,செப்.15- அகில இந்திய பல்கலைக்கழக வரிசை யில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழ கம் 33-வது இடத்தை பெற்றுள்ளது என்று பதிவாளர் சேகர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கை யில், ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி  மாணவர்கள் வெளிப்பாடு, சர்வதேச வெளிப் பாடு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் வெளிப்பாடு, சர்வதேச வெளிப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், கருத்துக்கணிப்பு கள் என ஐந்து பகுதிகளின் கீழ் மதிப்பீடு செய்தும் ஆராய்ச்சி வெளியீடுகள் அதிக மான மேற்கொள்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தரவரிசை படுத்தப்படும். தேசிய கல்வி நிறுவன தரவரிசை 2021 -ல் (என்ஐஆர்எப் 2021) கலந்து கொள்ள பல் கலைக்கழக தரவரிசைப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ஜெயகாந்தன் 2021 ஆம் ஆண்டுக் காக தகவல்களை பல்கலைக்கழக பல்வேறு துறைகள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளிடம் இருந்து சேகரித்து அதனை முறைப்படுத்தி சமர்ப்பித்தார்.

இந்நிலையில் ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு 2021 ஆம் ஆண்டிற்கு நடத்தப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டி யலை வெளியிட்டுள்ளது. இதில் அழகப்பா பல்கலைக்கழகம் அகில  இந்திய பல்கலைக்கழக வரிசையல் 33வது  இடத்தை பெற்றுள்ளது. தவிர 1657 உயர்கல்வி  நிறுவனங்கள் வரிசையில் 57வது இடத்தை யும், தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக் கழக தரவரிசையில் 4வது இடத்தை பெற்று ள்ளது. ஏற்கனவே இந்திய பல்கலைக்கழக வரிசையில் 36வது இடத்திலிருந்து 33வது  இடத்தை தற்போது பெற்றுள்ளது குறிப்பிட த்தக்கது என்று தெரிவித்தார். அகில இந்திய அளவில் 33வது இடத்தை பெற உறுதுணையாக இருந்த  பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆராய்ச்சி மாணவர்களை தமிழக உயர்கல்வி செயலா ளரும், துணைவேந்தர் பொறுப்புக்குழு தலை வருமான கார்த்திகேயன், துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் டாக்டர் சுவாமிநாதன், மூத்த பேராசிரியர் குரு மூர்த்தி மற்றும் பதிவாளர் சேகர் ஆகியோர் பாராட்டினர்.

;