districts

img

விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்,ஜூலை 25-

     நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை கேட்டு மனு கொடுத்து விழுப்பு ரம் மாவட்டம், அரகண்ட நல்லூர் பேரூராட்சி அலு வலகம் முன்பு செவ்வாய் கிழமை (ஜூலை 25) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

     இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலை வர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் ஏ.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கே. சுந்தர மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கண்டாச்சிபுரம் வட்ட சிபிஎம் செயலாளர் எஸ்.கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை யடுத்து, நடந்த பேச்சு வார்த்தையில் அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து கலைந்து சென்றனர்.

    விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த காத்திருக்கும் போராட்டத்திற்கு எம்.சேகர் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலை வர் வி.அர்ச்சுனன் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசி னார். வி.கிருஷ்ணராஜ், ஏ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.