districts

சென்னை முக்கிய செய்திகள்

மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல் 

சென்னை,அக்,21- தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 3 நாட்களில் மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதையடுத்து ஆந்திரா மற்றும் தமிழக கடலோரத்தில் மீன் பிடிக்கும்  மீனவர்கள், உடனே கரைதிருப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கான  விற்பனையை அதிகரிக்க ஒப்பந்தம்

சென்னை,அக்.21-  காஞ்சிபுரத்தை சேர்ந்த நெச வாளர்கள் தங்களது கைத்தறி மற்றும்  பட்டுபுடவைகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய ஏதுவாக  டெல்லிவரி என்ற சரக்கு போக்கு வரத்து விநியோக நிறுவனம் முன்வந்துள்ளது. விற்பனையாளர் செயலி மூலம் நெசவாளர்களுக்கு இந்தியாவில் உள்ள 200க்கும் மேற்பட்ட நகரங்க ளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த விவரங்களை இந்நிறுவனம் வழங்குகிறது. டெல்லிவரி - இந்தியா  முழுவதும் 18,500க்கும் மேற்பட்ட   அஞ்சல் முகவரியில் பின்கோடு களில் களம் பதித்துள்ளது. இது செல்லர்ஆப் மற்றும் ஜவுளி நகரமான  காஞ்சிபுரத்தில் உள்ள சிறு வியாபாரி களுடன் இணைந்து கடந்த 6 மாதங்க ளாக இந்தியாவில் பல இடங்களில் சரியான நேரத்தில் ஆர்டர்களை நிறைவு செய்து வருகிறது.

5 வயது சிறுவனை ஆசிரியர் அடித்ததாக புகார்

வேலூர், அக். 21- வேலூரில் யுகேஜி படிக்கும் 5 வயது சிறுவனை  ஆசிரியர் அடித்ததாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த அருள் என்ப வருக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார்.  இவர், பேரணாம்பட்டு அருகே உள்ள தனியார்  பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்று விட்டு, மாலை  வீட்டிற்கு வந்தபோது, மாணவனுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தக் கசிவு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின்  தாய், உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றார். மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவரிடம் விசாரிக்கையில், ஆசிரியைதான் தன்னை அடித்ததாக கூறி யுள்ளார். இதையடுத்து இதுகுறித்து மாணவரின்  பெற்றோர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு


சென்னை,அக்.21- பூந்தமல்லியை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சியில் சித்திபுத்தி விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்த மான 1.01 ஏக்கர் நிலம் பூந்த மல்லி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைஒட்டி உள்ளது.  இந்த நிலத்தை சிலர்  பல ஆண்டுகளாக ஆக்கிர மித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த  இந்து சமய அறநிலை யத்துறை, ஆக்கிரமிப்பு களை அகற்றி நிலத்தை கையகப்படுத்த அதிகாரி களுக்கு உத்தரவிட்டி ருந்தது. அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயா தலைமையில் செயல் அலுவலர் மாத வன், பூந்தமல்லி தாசில்தார்  மாலினி மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள், வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றி கட்டிடங்க ளுக்கு சீல் வைத்தனர்.தற்போது ரூ.100 கோடி  மதிப்புள்ள 1.01 ஏக்கர்  ஆக்கிரமிப்பாள ர்களிட மிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, அத்து மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கட்டிடத்திற்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக் கப்பட்டது. மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுப்பதற்காக நசரத் பேட்டை போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

மலர் மருத்துவமனை  ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

சென்னை, அக். 21 - சென்னை அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவ மனை ஊழியர்களுக்கு 19 விழுக்காடு போனஸ் அறிவிக்கப் பட்டுள்ளது. போனஸ் தொடர்பாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தை யில் நிர்வாகம் சார்பில் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் வேணுமேனன், விவேக், பெசிலிட்டி இயக்குநர்  ஆர்.சந்திரசேகரன், ஊழியர் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, செயல் தலைவர் எம்.இன்ப அரசி  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு 19 விழுக்காடு போனஸ் வழங்க ஒப்பந்தம் முடிவானது. அதன்படி ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக 51 ஆயிரத்து 72 ரூபாயும், அதிகபட்சமாக 89 ஆயிரத்து 709 ரூபாயும் போனசாக கிடைக்கும் என்று போர்டிஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தெரிவித்தார்.

 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

சென்னை, அக். 21- தொடர் விடுமுறையை ஒட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து,  மேற்கொண்ட சோதனையில் விதிகளை மீறிய 1,545 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, போக்குவரத்து துறையினர் சோதனை  நடத்தினர். அதன்படி, 8,635 ஆம்னி பேருந்துகளில் நடத்திய  சோதனையில் 1,545 ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றிற்கு ரூ 27 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கத்தை விட 2 மடங்கு கட்டணம் வசூலித்த 102 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.