துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், பணிகளை புறக்கணித்துவிட்டு ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பா.மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர், மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ் பாபு, மத்திய குழு உறுப்பினர் சிவக்குமார், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல். அரிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.