districts

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் தண்ணீர் பயன்படுத்தும் தகுதியை இழந்தது

சென்னை,ஜன.18-  சென்னை நகரில் பாயும் முக்கிய ஆறுகளாக கூவம், அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளன. தற்போது இந்த ஆறுகளின் தண்ணீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனை சரி செய்ய அரசு தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய பரி சோதனையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர் நிலை களும் பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது தெரிய வந்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தேசிய நதிகள் பாது காப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள  ஆறுகள் மற்றும் நீர்நிலை களின் மாதிரிகள் சேகரிக் கப்பட்டன. இதில் அடை யாற்றில் 23 இடங்களிலும், கூவம் ஆற்றில் 18 இடங்க ளிலும் பக்கிங்காம் கால்வாயிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது. இதில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக் கப்பட்ட 41 இடங்களில் எதிலும் கரைந்த ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக் கிறது. இதனால் இந்த நீரில் எந்த வகை உயிரி னங்களும் வாழ தகுதி இல்லாதவையாக மாறி இருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி  கிராம் கரைந்த ஆக்சி ஜன் இருக்க வேண்டும்.  இதேபோல் ரசாயன ஆக்சிஜன் 30 வரை இருக் கலாம். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் 20-க்கும் கீழ்  இருக்க வேண்டும். ஆனால்  நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்களில் 56-க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூவம் மற்றும் பெருங்குடியில் இருந்து அடையாற்றில் கலக்கிறது. இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரி யத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக் கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.