districts

முன்னாள் டிஜிபியின் மேல்முறையீடு ஒத்திவைப்பு

விழுப்புரம், ஆக.2-

     2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வ ருக்கு பாதுகாப்புப் பணி யில் இருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதும், புகார் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்திய தாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் இந்த வழக்கில் தங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு  செய்தனர். ஆக.2 அன்று வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.