புதுச்சேரி, பிப்.28- புதுச்சேரி சுகா தாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் ரங்கசாமி தெரி வித்தார். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, சுகாதார மற்றும் குடும்ப நல வழித்துறை சார்பில் கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை (பிப்,28) நடைபெற்ற மாபெரும் சுகா தாரத் திருவிழாவை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன்,முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்த னர். இந்த நிகழ்ச்சியில், டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடு வதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் விரி வான திட்டமான “டிரீம்ஸ் 24 - பள்ளிகளில் கல்வி, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு 2024" மூலம் சிறப்பாக செயல்படுத்த உறு துணையாக இருந்த அரசு மற்றும் தனி யார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தூதர்க ளுக்கும் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி சான்றுகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய முதல மைச்சர், சின்னஞ் சிறிய மாநிலமான புதுச்சேரி சுகா தாரத்தில் சிறந்து விளங்கி னாலும், மருத்துவ பணி யிடங்களுக்கான காலி யிடங்கள் இன்னும் நிரப்ப முடியாதது வருத்தம ளிக்கிறது என்றார். சுகா தாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கோப்புகள் அனுப்பினாலும் அதற்கு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். விழாவில் சட்டப்பேர வைத் தலைவர் செல்வம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜே. சர வணன் குமார், தலைமைச் செயலாளர் சரத் சவு கான், அரசுச் செயலர் ஜெயந்தகுமார் ரே, சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், சுகா தாரத்துறை துணை இயக்கு நர் டாக்டர் ஆனந்த லட்சுமி, துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவி லியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் விழாவில் கலந்து கொண்ட னர். இந்த விழா மார்ச் 2 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. தினமும் நண்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் பொது சுகாதார சேவைகள், ஆலோசனைகள், அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களால் இலவச மாக வழங்கப்பட இருக்கி றது. சுகாதார கண்காட்சிகள் நடைபெறுகிறது.