திருவண்ணாமலை, பிப்.2- திருக்குறள் குறித்து இன்றைய இளையதலைமுறையிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் திரு வண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசி ரியை கல்பனா 1,330 திருக்குறளையும் வலமிருந்து இடமாக 4.15 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார். இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செயல்பட்டுவரும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது. திருமண் குரூப்ஸ் மற்றும் உத வும் கரங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. அப்போது, திரு வண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா திருக்குறளை வல மிருந்து இடமாக எழுதி கண்ணாடியில் காண்பித்தார். யோகா ஆசிரியை கல்பனா திருக்குறளை இடமிருந்து வலமாக எழுதி கண்ணாடியில் காண்பித்தார் அதில் திருக்குறள் நேராக தெரிந்தது. அப்போது அவர் இடமிருந்து வலமாக எழுதிய 1,330 திருக்குறளையும் அனைவரது பார்வைக்கும் காட்டினார். அவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.