districts

img

விபத்து நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்துக! ஏசி, பிரிட்ஜ் மெக்கானிக் சங்க மாநாடு கோரிக்கை

சென்னை, பிப். 9 - நலவாரிய விபத்து நிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று மெட்ராஸ் ஏர் கண்டிஷனிங் ரெப்ரிஜி ரேஷன் ஸ்மார்ட் டெக்னீசியன் யூனியன் வலியுறுத்தி உள்ளது. இந்த அமைப்பின் 2ஆவது மாநாடு ஞாயிறன்று (பிப்.9) ஆலந்தூரில் நடை பெற்றது.  இந்த மாநாட்டில், ஏசி தொழில் புரிவோர் பணியின் போது விபத்து மரணம் அடைந்தால் நல வாரியத்தின் மூலம் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. டெக்னீ ஷியன்கள் பணிக்கு செல்லும் போது சாலை விபத்தில் மரணம் அடைந்தால் நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, விபத்து நிவாரணத்தை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பதிவு பெற்ற தொழிலாளி பணியின் போது அல்லது சாலை விபத்து உள்ளிட்டு எந்த விபத்தில் இறந்தாலும் நிவாரணம் வழங்க வேண்டும். ஏசி மற்றும் குளிர் சாதன பொருட்கள் புதிய தொழில்நுட்பங்கள், பலவகையான வாயுக்களை (கேஸ்) கொண்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இப்படி யான உபகரணங்களை டெக்னீஷியன்கள் பழுது பார்க்க சிரமப்படுகின்றனர். எனவே கட்டுமான நல வாரியத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க தமிழ்நாடு உடலுழைப்பு வாரியம், தமிழக அரசு முன்வர வேண்டும். ஏசி தொழில் செய்வோர் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏறி பணி செய்யும் சூழல் உள்ளது. இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்க்க தமிழ்நாடு உடல் உழைப்பு நலவாரியம் மூலம் பாதுகாப்பு பெல்ட். காலணி போன்ற உபகரணங்களை கட்டணமின்றி வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் போன்ற திட்டங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு முகமது ரபி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இ.ரவி வரவேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் பேசினார். பொதுச் செயலாளர் பி.மகேஷ்  வேலை அறிக்கையும், பொருளாளர் பி.அகோரம் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். இணைச் செயலாளர் வி.சதீஷ் நன்றி கூறினார். நிகழ்வுகளை துணைச் செயலாளர் இ.ஐயப்பன் ஒருங்கிணைத்தார். சங்கத்தின் தலைவராக எஸ்.முகமது ரபீக், பொதுச்செயலாளர் இ.ரவி, பொரு ளாளராக பி.அகோரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.