districts

img

தலைக்கவசம் சட்டத்திற்கு உள்ள அச்சம் கூட எஸ்சி,எஸ்டி சட்டம் மீது இல்லை!

ராணிப்பேட்டை, செப்.1 - ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த கல்லூரி மாணவன்  கதிர்வேல் அதே பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் கடந்த திங்களன்று (ஆக. 19)  படுகொலை செய்யப்பட்டார். இந்த வன் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் பி.ரகுபதி தலைமை யில் சனிக்கிழமையன்று (ஆக. 31) முத்துக்கடை பேருந்து நிலை யம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தீ.ஒ.முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் பேசுகையில், சாதி மாநாடுகளில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் சாதி ஒழிப்பின் இன்றைய நிலை. சாதி ஆணவ படுகொலைக்கு தமிழ்நாடு முதல மைச்சர் சட்டமன்றத்தில் நடப்புச் சட்டங்கள் போதுமென  அறி வித்துள்ளார். நடப்புச் சட்டங்கள் போதுமானதாக இல்லை, எனவே தான் சிறப்பு சட்டம் தேவை என கோரிக்கை எழுகிறது. மீண்டும் ஒரு ஆணவ படுகொலை நடந்து விடக்கூடாது அதனால் தான் தனி சிறப்பு சட்டம் தேவை வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும்.    சாதிய உணர்வை ஊட்டும் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆர்எஸ்எஸும், பாஜகவும் சாதியை தீவிர படுத்துவதற்காக பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். சாதில உணர்வை ஊட்டுகிறார்கள். சாதி வாரியாக திருமண தகவல் மையங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இது சட்டவிரோதம் தானே, ஏதாவது நடவடிக்கை உண்டா.? நடைபெறும் குற்றங்களுக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் காவல்துறையின் உடைய நடைமுறையில் ஏற்பட்டுள்ள மெத்தனமாக உள்ளது.  கதிர்வேலை இழந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கு, சட்ட பூர்வ மான உதவிகள் செய்வதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம்  உள்ளது. காவல்துறையின் மெத்த னத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை செயல்பாடுகள் முக்கிய காரணம்.  தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல் லாம் அவர்களுக்கு ஆதரவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் துணையாக நிற்கும் என தெரி வித்தார். தமிழகத்தில் தலைக் கவசத்திற்கான விழிப்புணர்வும், பயமும் கூட எஸ்சி, எஸ்டி ஆணவ படுகொலை செய்பவர்களுக்கு இல்லை என இது காட்டுகிறது. காவல் துறையும், வருவாய் துறை யும் கதிர்வேல் வழக்கு ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் கட்சியின் வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணி கண்டன், கலவை தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு முன்னிலை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செய லாளர் கே. சாமுவேல்ராஜ், கட்சி மாவட்ட செயலாளர் என். காசி நாதன், தீ.ஒ.முன்னணி மாநில துணைச் செயலாளர் பா. செல்வன், மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன், வேலூர் மாவட்ட செயலாளர் வி, குபேந்திரன், கதிர்வேலின் தந்தை நரசிம்மன், தாய் மகேஸ்வரி, தீ.ஒ.மு மாவட்ட பொரு ளாளர் டி. மோகன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ், வி.தொ.ச மாவட்ட தலைவர் டி. சந்திரன், வி.ச மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, வி.ச மாவட்ட பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், லிக்காய் பொதுச் செயலாளர் தா. வெங்கடேசன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைவாணன், துப்புரவு மாவட்ட செயலாளர் பி. கே.கோதண்டபாணி, கட்டுமானம் மாவட்ட தலைவர் என். ரமேஷ், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் மணி, செயலாளர் கே.கே.வி. பாபு, பொருளாளர் ரமேஷ், போக்குவரத்து மண்டல செயலாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் மருதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.