மதுராந்தகம் வட்டம் பாக்கம் கிராம பேருந்து நிலையத்தில் ஏபிஜே அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சிஐடியு கிளை துவக்க விழா நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மாசிலாமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். சங்கத்தின் கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டப் பொருளாளர் எம். ரமேஷ், வட்டாரச் செயலாளர் இளங்கோவன் , ஊராட்சி மன்றத் தலைவர்அமல் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் எல்லப்பன், பாலு, ராஜா, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோ பங்கேற்று பேசினர்.