districts

img

விளைநிலங்களை அழிக்கும் சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும்

திருவள்ளூர், ஜன. 10- மாநெல்லூரில் விளை நிலங்களை அழித்து, மாநில அரசு கொண்டுவர உள்ள சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் புதனன்று (ஜன 10), கும்மிடிப் பூண்டியில் நடைபெற்றது.   கும்மிடிப்பூண்டி வட்டத்தை சேர்ந்த மாநெல்லூர் மற்றும் சூரப்பூண்டி சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 2500 ஏக்கர்   பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில்  சுமார் ரூ. 353 கோடியில்  மாநெல்லூர்  சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்போவ தாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து தொழிற்பூங்காவிற் கான சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில், மாசு  கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில்  மாதர் பாக்கத்தில் உள்ள தனியார்  திருமண மண்ட பத்தில் கடந்த ஆகஸ்ட் 23  அன்று மக்களின்  கருத்து கேட்பு கூட்டம் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவிற்கு பொதுமக்கள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநெல்லூர் ஊராட்சியில் பொதுமக்களின் சார்பில்,  இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து கிராம சபையில் ஏற்கனவே தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தங்களின் வாழ்வாதார மாக திகழும் விளை நிலங்களை தொழிற் பேட்டை அமைக்க அனுமதிக்கமாட்டோம். என தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து மாநெல்லூர், சூரப்பூண்டி, சாணாபுத்தூர், பூவலம்பேடு, மார்பாக்கம், தாணிப்பூண்டி, பாதிரிவேடு,  கீமலூர், பன்னூர், அல்லிபூகுளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 500 கும் மேற்பட்ட விவசாயிகள் மனுக்களுடன் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கூடினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன் பேசுகையில், மாநெல்லூரில் சிப்காட் அமைக்க முதல் திட்டத்திற்கும், இரண்டா வது திட்டத்திற்கும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இந்த சூழலில் நிலங்களை கையகப் படுத்துவது ஏற்புடையது அல்ல. 2500 ஏக்கர் விளை நிலங்களிலும் அனைத்து விதமான பயிர் வகைகளும் விளையக்கூடிய தன்மை வாய்ந்த பூமியாகும்.  அந்த நிலத்தை மாசு படுத்த அனுமதிக்கமாட்டோம்.வாழ்வாதார மாக விளங்கும் நிலங்களை இழப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். 2013 நிலம் கையகப் படுத்தும் சட்டத்தின் கீழ் நிலங்களை எடுக்க  தமிழ்நாடு அரசு தயாராக இல்லை. அரசின்  திட்டத்திற்கு 2 சென்ட் நிலத்தை கூட கொடுக்க  முடியாது என்றார். இந்த போராட்டத்தை தொடர்ந்து வட்டாட்சியர் ப்ரிதி சம்பவ இடத்திற்கு வந்து  மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த  மனுவின் விவரத்தை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிப்பதாகவும் கூறினார். இதற்கு மாநெல்லூர் விவசாயி தீனத யாளன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட  செயலாளர் ஜி.சம்பத், வட்டத் தலைவர் எம்.ரவிக்குமார், வட்டச் செயலாளர் எம்.சிவகுமார், துணைத் தலைவர்கள் பி.கருணாமூர்த்தி, வெங்கட் டிகிரி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப. லோகநாதன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் பேசினர்.