சென்னை, ஆக. 31- மின்சார வாரியத்தை தனியார் மயமாக் கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மேற்கு கிளை 15ஆவது மாநாடு அம்பத்தூரில் தோழர் சு.லெனின் சுந்தர் நினைவரங்கில் சனிக்கிழமை (ஆக. 31) நடைபெற்றது. கிளைத் தலைவர் என்.அச்சுதன் தலைமை தாங்கினார். சங்க கொடியை தர்மர் ஏற்றினார். எம்.புருஷோத்தமன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செய லாளர் கே.ஆர்.முத்துசாமி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கிளைச் செயலா ளர் டி.கே.சம்பத்ராவ் வேலை அறிக்கையை யும், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்த னர். சென்னை வடக்கு மண்டல செயலாளர் எஸ்.கணேசன், மாநில துணைத் தலைவர் என்.தீரமணி, மின் ஊழியர் மத்திய அமைப் பின் மேற்கு கிளை தலைவர் எஸ்.தசரதன், செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீசன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக இணைச் செயலாளர் டி.டி.ஜெயபிரகாசம் வரவேற்றார். பி.எஸ்.பார்த்தசாரதி நன்றி கூறினார். தீர்மானங்கள் மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மின்சார சட்டம் 2023ஐ வாபஸ் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறு படிகளை களைய வேண்டும், ஒப்பந்த ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், விதவை, விவாகரத்து பெற்றவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக என்.அச்சுதன், செயலாள ராக டி.கே.சம்பத்ராவ், பொருளாளராக எஸ்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.