districts

img

9 ஆம் வகுப்பில் சேர்ந்த பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு வரவேற்பு

சிதம்பரம், ஜூன் 16-

     சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் படிக்கும் இருளர் இன மாணவர்கள் பள்ளி இடை நிற்றலை தடுப்பதற்காக சிறப்பு வரவேற்பு கொடுத்தனர்.

     கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய (இருளர் பழங்குடியினர்) நடு நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாண வர்களை கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்துக் கூறியும் 9 ஆம் வகுப்பில் சேர்த்தனர்.

    இந்த மாணவர்களுக்கு தேவையான சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

    அப்பகுதியில் பெரும்பாலான மாணவர்கள், 8 ஆம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிடும் நிலையில், கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.