தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் அமைக்கப்பட்டிருந்த காஷ்மீர் பாலஸ்தீனம் குறித்த கண்காட்சியை மஸ்ஜித் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் முகமது பஷீர் திறந்து வைத்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், எல்.பி.சரவணதமிழன், எஸ்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.