districts

img

மலைக்குறவன் இன மக்களுக்கு பழங்குடி இனச் சான்றிதழ் கேட்டு முற்றுகைப்போராட்டம்

திருவள்ளூர், நவ 20- மலைக்குறவன் இன மக்களுக்கு பழங்குடி இனச் சான்றிதழ் (எஸ்.டி), கேட்டு பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் புதனன்று (நவ 20), முற்றுகையிட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மலைக்குறவன் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூங்கில் கூடை பின்னி அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலை யில் இருந்தாலும் இம்மக்கள் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆரம்ப  பள்ளியில் சேர்க்கின்றனர். பள்ளியில் சேரும் போது, எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று ஆசிரியர்கள் கேட்கிறார்கள். பழங்குடி இனச் சான்றிதழ் இல்லாததால் எந்த சலுகைகளும் பெற முடியவில்லை. இதனால் கல்வியை இம்மாணவர்கள் தொடர முடியாமல் இடையிலேயே நின்று விடுகிறார்கள். குழந்தைகள் படிக்க விருப்பம் இருந்தும், அரசாங்கம் சான்றிதழ் வழங்காததால் கல்வி கற்க முடிய வில்லை.கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆத்துப்பாக்கத்தில்  கடந்த ஆண்டு மலைக்குறவன் இன மக்க ளுக்கு பழங்குடி இனச் சான்றிதழை தற்போது உள்ள பொன்னேரி கோட்டாட்சியர் வாக்கே சங்கேத் பல்வந்த்  வழங்கியுள்ளார். இதன் அடிப் படையில் கோங்கல்மேட்டில் வாழும் 46 மலைக்குறவன் இன மக்களுக்கும், பழங்குடி இன சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேரி லும், ஆன்லைன் மூலமும் விண்ணப் பித்துள்ளனர்.  இருப்பினும் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் இம்  மக்கள் கடந்த ஒரு வாரமாக பல போராட்டங்களை முன்னேடுத்துள் ளனர்.  புதனன்று (நவ 20), மலைக்குற வன் இன மக்களுக்கு,பழங்குடி இன சான்றிதழ் (எஸ்.டி), வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நூதன முறையில் மூங்கில் கூடை பின்னி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி குழந்தைகள், கைக் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். படிப்பை விட்டு பெண் குழந்தைகளுக்கு திருமணம் கோங்கல்மேடு கிராமத்தை சேர்ந்த குடும்ப தலைவி ரேகா கூறுகையில், பழங்குடி இன சான்றிதழ் கிடைக்காத தால், நானே ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. எங்கள் பெண்  குழந்தைகளும் சான்றிதழ் கிடைக்காத தால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு திருமண செய்து விட்டோம். குழந்தைகளுக்கு படிக்க விருப்பம் இருந்தும் சான்றிதழ் கிடைக்காத தால் படிக்கவும் முடியவில்லை, வேலைவாய்ப்பும் இன்றி தவிக்கி றோம் என வேதனையுடன் கூறினார். ஆர்டிஓ பேச்சுவார்த்தை இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தி லிருந்து கோங்கல்மேடு பகுதிக்கு வந்து  மலைக்குறவன் மக்களிடம் ஆய்வு செய்து அதன் அறிக்கையின் அடிப் படையில் இன சான்றிதழ் வழங்கப் படும். ஜனவரி மாதம் வரை அதற்கான கால அவகாசம் தேவைப்படும். உறுதி யாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் அட்டை, ரேசன் கார்டு, சுடுகாடு, பிறப்பு சான்றிதழ் போன்றவற்றை வழங்க உடனடி நட வடிக்கை எடுக்கப்படும் என பொன்னேரி ஆர்டிஓ வாகேசங்கேத் பல்வந்த் உறுதியளித்துள்ளார். போராட்டத்திற்கு மலைக்குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம்  தலைவர் ப.ரவி தலைமை தாங்கினார்.இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், மாநில துணைச் செய லாளர்கள் ஆர்.தமிழ்அரசு, இ.கங்கா துரை, மாவட்ட நிர்வாகி கே.மதி, சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், சிபிஎம் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், கட்டு மான சங்கத்தின் தலைவர் எம்.சி.சீனு,  வாலிபர் சங்கத்தின் நிர்வாகி வசந்த் பௌத்தன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.