districts

img

புத்துயிர் பெறும் மணலி - மாத்தூர் ஏரி

சென்னை, பிப். 2- சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்திற்கு உட்பட்ட 20ஆவது வார்டில் காமராஜ் சாலையில் மணலி மாத்தூர் ஏரி உள்ளது. ஒரு பக்கம் 32 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதன் மறுபக்கத்தில் அதே அளவு ஏரி உள்ளது. இது மாதவரம் மண்டலத்தைச் சார்ந்தது. இந்த ஏரியை சுற்றி தற்போது விவசாய நிலங்கள் எதுவும் இல்லை. ஆண்டு முழுவதும் இந்த ஏரியில் தண்ணீர் தேங்கி யிருக்கும். இந்த ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி தூய்மைப்படுத்தினால் இங்கு வசிக்கும் ஒரு லட்சம் மக்களுக்கு பயனுள்ள தாக இருக்கும். மாத்தூர் பகுதியில் உள்ள 10,000 மேற்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கும் பயனுள்ள தாக இருக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், நடைபாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த  னர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மணலி மண்டலம் சார்பில் இந்த ஏரியை சுற்றி நடைபாதை அமைக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து  ரூ4.73 கோடி  மதிப்பீட்டில் ஏரியை சுற்றி நடைபாதை, பூங்கா, இருக்கைகள் அமைத்து புனரமைக்கும் பணி மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்ச னம் தலைமையில்  நடை பெற்றது. இந்த பணிகள் 9 மாதங்களில் முடிவடையும் என்று மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர். இதில் மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பி னர்கள் காசிநாதன், நந்தினி, ராஜேந்திரன், கீர்த்தி, செயற்பொறியாளர் பிரதீப் குமார், மண்டல அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.