திருவள்ளூர், அக். 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்ட 24 வது மாநாடு ஞாயிறன்று (அக்.13), தோழர்கள் சீத்தா ராம் யெச்சூரி, என்.சங்கரய்யா நினைவரங்கத்தில் மாதர்பாக்கத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்டக் குழு உறுப்பினர்கள் ப.லோகநாதன், எம்.காமாட்சி ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த உறுப்பினர் பி.கருணாமூர்த்தி கொடியை ஏற்றி வைத்தார். வட்ட குழு உறுப்பினர் எம்.சி.சீனு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்ட குழு உறுப்பினர் எம்.சிவக்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் துவக்கவுரையாற்றினார்.வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் வேலை அறிக்கையை முன்வைத்தார். வட்ட குழு உறுப்பினர் டி.கோபாலகிருஷ்ணன் வரவு செலவு கணக்கை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் வாழ்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் மாநாட்டை நிறைவுசெய்து பேசினார். கிளை செயலாளர் ஏ.கோபால் நன்றி கூறினார். வட்டக்குழுதேர்வு 13 பேர் கொண்ட கும்மிடிப்பூண்டி வட்ட குழுவின் செயலாளராக டி.கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சட்ட விரோதமாக ரசாயன கழிவுகள் வெளியிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடிய ஆலைகளை திறக்க வேண்டும், மாதர் பாக்கம், பாதிரிவேடு, மாநெல்லூர் ஆகிய பகுதிகளில் கைத்தறி நெசவு தொழிலாளர்களை பாதுகாக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் தொழில் தொடங்க வங்கி கடன் வழங்க வேண்டும், மாம்பழம் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.